பாக்., மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. அதன்படி இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்.
9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்திய இந்திய ராணுவம்.
4 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் நிலையங்களின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி:
பாகிஸ்தான் லாகூர், சியால்கோட் விமான நிலையங்கள் மூடல்.
பாக்., மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்.
கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 5 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தகவல்.
இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிப்பு விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதலை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி துல்லியமாக தாக்கும் திறன்படைத்த அதிநவீன குண்டுகளை பயன்படுத்தி இலக்குகளை குறிவைத்து முப்படைகளும் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தின. மேலும் பஹல்காமில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் இந்திய உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

