By, சிஎன்.அண்ணாதுரை
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம்வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கையில் கலைஞரின் சாதுர்யத்தை நினைவு கூர்ந்த கனிமொழி எம்.பி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பெரியதாழை புத்தன்தருவை, பூச்சிக்காடு,தட்டார்மடம், பொத்தகாலன்விளை,முதலூர், பண்ணம்பாறை, சாத்தான்குளம் பேரூராட்சி காமராஜர் சிலை, கொம்பன்குளம், கலுங்குவிளை, ஆனந்தபுரம், தைலாபுரம் ஆகிய பகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பெரியதாழை ஊராட்சியில் பேசிய கனிமொழி எம்.பி: கலைஞர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், எவ்வளவு அழகாகக் கொடிகளைக் கட்டி இருக்கிறார்கள் என்று உடன் இருந்தவர்கள் சொன்னார்களாம், கலைஞர் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சிறிது தூரம் போனபிறகு, மரக்கிளைகளை வைத்து கொடிகள் கட்டப்பட்டு இருந்ததாம். அதைப் பார்த்த கலைஞர், இது தி.மு.கழகத்தினர் கட்டிய கொடி, இது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினாராம்.
இன்று இந்த பகுதியில் உயர்த்தி பிடித்து இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கொடியும், உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து கொண்டு வந்த கொடி என்று பார்க்கும்போது எனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த கொடிகளை உங்கள் கைகளில் யாரும் கொடுக்கவில்லை, நீங்களே உருவாக்கிக் கொண்டு வந்து, உயர்த்தி பிடித்து உள்ளீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைப் பார்க்கும் பொது, எனக்கும் கலைஞரைப் பார்க்கும் உணர்வு வருகிறது எனத் தெரிவித்தார்.
காரைநிறுத்தியசிறுவர்களுக்கு, கைப்பந்து வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சிஅளித்த கனிமொழி எம்பி
முன்னதாக பெரியதாழை ஊராட்சிக்கு கனிமொழி எம்பி வாகனம் சென்று கொண்டு இருந்தபோது, அவரது வாகனத்தை சிறுவர்கள் சிலர் இடைமறித்தனர், உடனே, சிறுவர்களை காண வாகனத்தை நிறுத்திய கனிமொழி எம்பி, அவர்களுடன் அன்போடு உரையாடினார். சிறுவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென உரிமையோடு கனிமொழி எம்பி, யிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களை பெரியதாழை ஊராட்சியில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று கைப்பந்துகள், கைப்பந்து வலைகள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.
தொடர்ந்து சாத்தான்குளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக இங்கு நிறுத்தி இருந்தார். எனக்கு மிகப்பெரிய வெற்றியை அன்பான வாக்குகள் அளித்து இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 நாள் வேலைத் திட்டம் என்பது காங்கிரஸ்-திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் ஒவ்வொரு வருடமும் அத்திட்டத்திற்காகக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

