தூத்துக்குடி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
தூத்துக்குடி மாநகரத்தில் ஏற்கனவே பக்கிள் ஓடை இருந்தாலும் புதிய வழித்தடங்களான மீன்வளக் கல்லூரி முதல் புறவழிச் சாலை வரை, சங்கரப்பேரி விலக்கில் இருந்து ஓடை வரை, பெல் ஹோட்டல் முன்பு, ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் வரை, செல்சீனி காலனியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வழியாகவும், கருணாநிதி நகர் இனைக்கும் சாலை, முத்து நகர் கடற்கரை வழியாக என தற்பொழுது புதிய வடிகால் பணிகள் நிறைவுற்றுள்ளன. ஆகவே மாநகர மக்கள் எந்தவித ஐயமும் கொள்ள வேண்டாம் பொதுமக்கள் நலன் கருதி தேங்கும் மழைநீரை சில பகுதிகளில் வழித்தடம் இல்லாத நிலையில் இருக்கும் இடங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி அப்புறப்படுத்தப்படும்
தொற்றுநோய் பரவாத வகையில் பிளிச்சிங் பவுடர் தௌிக்கப்படும் மக்கள் மரம் மின்கம்பம் பழமையான கட்டிடம் பகுதிகளில் மழைக்கு ஓதுங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எல்லா முன்னெச்சாிக்கை நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு என்றும் மாநகராட்சி நிர்வாகமானது தயார் நிலையில் இருக்கின்றது என தொிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், வட்டச்செயலாளர் ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மற்றும் ஜோஸ்பா் உள்பட பலர் உடன் சென்றனர்.

