December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மழை வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு முத்தூட் நிறுவனத்தின் புதிய வீடுகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பெய்த கன மழையால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆஷியானா திட்டத்தின் கீழ் முத்தூட் நிதி நிறுவனம் சமூகநல பொறுப்பு நிதியின் மூலம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து 11 வீடுகளை கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்கும் விழா 22.09.25 அன்று ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரம் பாலாஜி ஹாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் முத்தூட் குழும நிறுவனங்களின் தலைவர் ஜார்ஜ் ஜேக்கப் முத்தூட் மற்றும் முத்தூட் நிதித்துறை துணை நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் ஜேக்கப் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், பயனாளிகள் 11 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவியை முத்தூட் துணை நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் ஜேக்கப், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ, ஆகியோர் வழங்கினர்.

கேரள மாநில வெள்ளத்திற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆஷியானா திட்டம் மூலம் இதுவரை இந்தியா முழுவதும் 270 வீடுகளை கட்டி வழங்கி உள்ளது. இதில் கேரளாவில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும் ஹரியானா – ரேவாரி 20 வீடுகளும் உத்தரகாண்ட் ஹரித்துவாரில் 10 வீடுகளும் தற்போது தமிழ்நாட்டில் 11 வீடுகளும் அடங்கும். 

இந்தியா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டுவதற்காக முத்தூட் நிதி நிறுவனத்தின் முயற்சியே ஆஷியான திட்டமாகும். இதுவரை ரூ 21 கோடியை முதலீடு செய்துள்ளது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 11 வீடுகள் ரூபாய் ஒரு கோடி செலவில் கட்டித் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கான சுற்றுச்சுவரை முத்தூட் ஃபைனான்ஸ் கட்டிக் கொடுத்துள்ளது. அதோடு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் சமூக சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் காவல்துறையின் பங்கைப் பாராட்டும் ஒரு அடையாளமாக இது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் ஜார்ஜ் ஜேக்கப் முத்தூட் பேசுகையில்

நிதி சேவைகளுக்கு அப்பால், வலுவான சமூகங்களை உருவாக்குவதே எங்கள் பொறுப்பு எங்கள் ஆஷியானா திட்டத்தின் மூலம், இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு, குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப உதவுகிறோம். எங்கள் நோக்கம் தங்குமிடம் வழங்குவது மட்டுமல்ல. எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உணர்வை உருவாக்குவதும் ஆகும். நாங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு வீட்டின் மூலமும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் நம்பிக்கையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க நம்புகிறோம்.

வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீண்டகால மறுவாழ்வுக்கான உதவியை வழங்குவதில் முத்தூட் குழுமம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது சமீபத்திய வீடுகளின் தொகுப்புடன், 2025 நிதியாண்டில் மட்டும் முத்தூட் நிதி நிறுவனம் ரூ 102.9 கோடியை சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் பல முதன்மையான சமூகப் பொறுப்புத் திட்டங்களையும் நடத்துகிறது மொத்த சமூகப் பொறுப்புத் திட்டத்தில் கிட்டத்தட்ட 65% கல்வி உதவித்தொகை நிதியாண்டு 25 இல் ரூ. 14 கோடி). முத்தூட் எம் ஜார்ஜ் சிறப்பு விருதுகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற சீரிய முயற்சிகளை மேற்கொள்கிறது.

சுகாதாரப் பராமரிப்பு முயற்சிகளில் டயாலிசிஸ் மற்றும் நீரிழிவு பராமரிப்பு மையங்கள் மருத்துவ உதவி மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை அடங்கும் அதே நேரத்தில் சமூகத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் சுத்தமான குடிநீர் தேவியை பூர்த்தி செய்தல், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான இரத்த தான இயக்கங்கள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

முன்னதாக பள்ளி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் புத்தகப் பைகளை ஊர்வசி எஸ் அமிர்தராஜ் எம்.எல்ஏ, மற்றும் முத்தூட் துணை நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் ஜேக்கப் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் முத்தூட் பைனான்ஸ் மதுரை மண்டல சிஎஸ்ஆர் மேலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னதுரை, அருட் தந்தையர்கள் ஷிஃபா ஜான், சகாயா, முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்த சிவசுப்பு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் உச்சம்பட்டி சுரேஷ் , தொண்டு நிறுவன நிர்வாகி செலின் ஜார்ஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.