December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் – 1800 2300 401 மேயர் ஜெகன் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 18.09.25 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியாங்கா, துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்றார்.

முகாமில் கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.

முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி

 தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 15 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. முகாமில் ஏற்கனவே இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 746ல் 687 தீர்வு காணப்பட்டுள்ளது. 59 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. பெயர் மாற்றம் முகவாி மாற்றம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. 

மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி முதலமைச்சரின் உத்தரவிற்க்கிணங்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் பெறப்படும் மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இம் முகாமில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு தீர்வாணைகளை மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி கொண்டு சேர்க்கின்றனர். இப்படி பொதுமக்களின் தேவைகளுக்காக வசதிகளுக்காக முகாம்கள் நடைபெறுவதால் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனா்.

இப்படி மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ரோச் பாா்க் கடற்கரை சாலையில் ஆரோக்கிய  நடைபாதையாக 8 கிலோமீட்டம் தூரம் மேம்பபடுத்ப் பட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு புறம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் எதிர்புற சாலையிலும் நடைபாதை பணி நிறைவடையும். முத்துநகா் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர் சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று டபிள்யுஜிசி சாலை ஓரங்களில் பேவா்பிளாக் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு செய்யாத வகையில் ஒருபுறம் வாகனங்களை மக்கள் நேர்த்தியாக பார்க் செய்ய வேண்டும்.

மழைக் காலம் துவங்கி விட்ட நிலையில் கிழக்கு மண்டலத்தில் கடந்த காலத்தில் ஏ.வி.எம் மருத்துவமனை, மண்டல அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், தற்போது மழைநீர் தேங்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மண்டலத்தை பொருத்தவரை குப்பைகளை மக்கள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வலியுறுத்தி வருகிறோம். மாநகராட்சி ஒவ்வொரு முறையும் மக்களுக்கு முக்கிய வேண்டுகோளாக வைப்பது பிளாஸ்டிக் கேரி பேக்குகளை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் இடத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கேரி பேக் பயன்பாட்டை தடுத்து வருகிறோம். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் – Toll free No : 1800 2300 401 அறிவித்துள்ளோம். மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தூய்மையான பசுமையான மாநகரை உருவாக்க அனைவரும் மாநகராட்சி நிா்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இன்றைய முகாமில் பெறப்பட்ட 23 மனுக்களில் பிறப்பு இறப்பு பெயா் மாற்றம் என 5 பேருக்கு உடனடியாக தீர்வு ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினாா். 

        நிகழ்ச்சியில் துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற் பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ரெக்ஸிலின் பேபி ஏஞ்சலின, மாியகீதா, எடின்டா, தனலட்சுமி, ராமு அம்மாள், மும்தாஜ் மற்றும்  இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாளர் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்பட பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.