November 30, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியாபுரத்தில் ரேசன் கடையை சண்முகையா எம்.எல்.ஏ, திறந்து வைத்தார்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து பூப் பாண்டிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் கோரிக்கைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கேட்டறிந்தார். இதில் குடிநீர் வரவில்லை என்று பெண்கள் கூறியதை அடுத்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசிய சண்முகையா எம்.எல்.ஏ, அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் சீராக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா, பானு, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவுச் சங்க செயலாளர் பாலமுருகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி.ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.ஸ்டாலின், வழக்கறிஞர் பால்துரை, மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் தங்கமாரி முத்து, வர்த்தகர் அணி பிலோமின்ராஜ்,தகவல் தொழில் நுட்ப அணி சின்னதுரை, ஒன்றிய கழக நிர்வாகிகள் கணேசன், நெல்சன், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், கிளை கழக நிர்வாகிகள் கதிர்வேல், பூசாரி முருகன், பாரதிராஜா, மு.க.முருகன், துரை, இம்மானுவேல், ராயப்பன், அன்புரோஸ், கோட்டைக்குமார், ராமர் பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.