திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மாதந்தோறும் நடைபெறும் வழக்கப்படி ஆகஸ்ட் மாதத்திற்கும் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் சு. ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் முத்துமாரியம்மாள், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


