தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தலைமையிலான திமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓராண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் தோ்தல் பொறுப்பாளா்கள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி நெல்லை தொகுதிக்கு பொறுப்பாளராக மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நியமணம் செய்யப்பட்டார். 40க்கு 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையொட்டி சென்ைன குறிஞ்சி இல்லத்தில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாரை அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார். 
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்

