தூத்துக்குடி மாநகராட்சி, தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது புத்தகத் திருவிழா (தொடர்ந்து படி தூத்துக்குடி)-க்காக தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட புகைப்படக்கண்காட்சி போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை 23.08.2025 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக “தொடர்ந்து படி தூத்துக்குடி” 6வது புத்தகத் திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய ராட்சச பலூன்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் முன்னிலையில் பறக்க விட்டார். பின்னர் புத்தக அரங்குகளை பார்வையிட்ட கனிமொழி எம்பி, பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேஷ் சந்தர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதி பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

