தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (16.09.2025) செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மனுதாரருக்கும் வரவேற்பு சீட்டை வழங்க வேண்டும்
ஆய்வின்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை பார்வையிட்டு, காவல் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் காவல் நிலைய வரவேற்பாளர் புகார் மனு அளிக்கும் ஒவ்வொரு மனுதாரருக்கும் வரவேற்பு சீட்டை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

