தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி “மதச்சார்பின்மை காப்போம்” பேரணி தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட விசிக அலுவலகத்தில் விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன், தலைமையில், மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் முனீஸ்குமார், சமத்துவ வழக்கறிஞர் அணி சார்லஸ், உப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி விஜி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக விசிக கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் தமிழ் குட்டி, தெற்கு மாவட்ட பொருளாளர் காசி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் விமல் வங்காளியார் கலந்து கொண்டனர்.
மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் குரு பிரசாத் அனைவரையும் வரவேற்றார். 
ஆலோசனைக் கூட்டத்தில் விசிக கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் தமிழ் குட்டி பேசுகையில்; ஜுன் 14 அன்று திருச்சி மாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தலைமையில் நடைபெற்ற
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து “மதச்சார்பின்மை காப்போம்” எழுச்சி பேரணியில்” நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் குறித்த விளக்க பொதுக் கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்த வேண்டும் என்ற தலைமையின் உத்தரவிற்க்கிணங்க, தூத்துக்குடி மத்திய மாவட்ட விசிக சார்பில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டம் குறித்தும் திருச்சி “மதச்சார்பின்மை காப்போம்” பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொதுமக்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மை சொந்தங்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் எடுத்துக் கூறி “மதச்சார்பின்மை காப்போம்” பேரணி தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை எந்தெந்த வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். இதற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, முகாம் விசிக நிர்வாகிகள் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும். அதோடு சிறுபான்மையினர், பொதுமக்களை சந்தித்து அணிதிரட்டி பெருமளவில் பங்கேற்க்கச் செய்து, எழுச்சித்தமிழர் லட்சியத்தை நிறைவேற்ற ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி (தமிழ்நாடு மின்வாரியம்) மாநில துணை செயலாளர் பாபா செல்வம், மகளிரணி மத்திய மாவட்ட செயலாளர் சித்ரா, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அர்ஜுன், செந்தில் வேல், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், தொண்டரணி நிர்வாகிகள் தமிழ் குமணன், பட்டு வளவன், வட்ட செயலாளர் ஜேசு ராஜ், தெர்மல் ரவி நிலவளவன், வட்ட துணை செயலாளர்கள் சந்தனகுமார், குட்டி சிறுத்தை, வட்ட பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் தொழிலாளர் விடுதலை முன்னணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஊடக பிரிவு முத்துக்குமார், அம்பேத்கர் நகர் முகாம் அந்தோணி, ரஜினி மாரியப்பன், சோட்டையன் தோப்பு முகாம் ரஞ்சித் பாண்டியன், பூபாலன், குமார் மற்றும் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் மத்திய மாவட்ட விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ராம்குமார் நன்றியுரை ஆற்றினார்.

