December 1, 2025
#தூத்துக்குடி

சீரான குடிநீர், சாலை, வடிகால் முழுமையாக அமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் ஒத்துழைக்க மேயர் ஜெகன் வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது, ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;
மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. சில பணிகள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல பணிகளை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம். பாதாள சாக்கடை உள்பட நிறைவேற்றபட வேண்டிய அனைத்து பணிகளும் முறைப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றி தரப்படும். எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.

சிறப்பு நிதி 14.70 கோடி மதிப்பீட்டில் பணிகள்;

கூட்டத்தில் உள்ளாட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் அனைவருக்கும் பணிகள் குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் புத்தாக்க பயிற்சி ஆகிய இயக்குநர் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி நிறுவனத்திற்கு ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் வருடாந்திர பங்களிப்பு தொகை 300 லட்சம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை ஆணையிட்டுள்ளது. அதற்கு 300 லட்சம் ஒதுக்கீடு செய்வது மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பொதுநிதித்திட்டம் 2025 26ன்கீழ் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் உள்ள பழுதான மின்விளக்குகளை சரிசெய்து மாற்றி அமைக்கும் பணிக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு அதற்கு அனுமதிவழங்குவது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 21.83 கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக 253 சாலைகள் அமைக்கும் பணிக்கு 25 26ல் சிறப்பு நிதி 14.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் மேற்கொள்வது மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பை மறுசூழற்சி குப்பை எனத் தனித்தனியாக பிரித்து ஒப்படைக்கும் பணியினை ஜிஎஸ்டி நீங்கலாக பல நிறுவனங்களுக்கு மேற்கண்ட பணிகளை ஒப்பந்த உடன்படிக்கை படி முதல் ஆண்டு டிம்பிங் கட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டு 10 சதவீதம் உயர்த்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் திமுக கவுன்சிலா்கள் சரவணக்குமாா், மெட்டில்டா, நாகேஸ்வாி, ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ், தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பாதாள சாக்கடை, குடிநீர், வடிகால் பணிகளை சுட்டிக்காட்டி பேசினர். பின்னர் நிறைவேற்றப்பட்ட சாலை கால்வாய் பூங்கா பணிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அதிமுக கவுன்சிலா் பத்மாவதி கோாிக்கை மனு வழங்கினார்.

கூட்டத்தில் உதவி மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, துணை பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், ராஜசேகா், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இன்றைய கூட்டத்தில் பணி மாறுதல் பெற்று சென்னை செல்லும் ஆணையருக்கு மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தொிவித்துக் கொண்டனர்.