December 1, 2025
#தூத்துக்குடி

79வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிய- தூத்துக்குடி ஜனநாயக மக்கள் உரிமைகழகம்

 தூத்துக்குடி, ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் S.சுந்தர் அவரின் அறிவுறுத்தலின்படி மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது அதேபோல் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J. கார்த்திகேயன் தலைமையில். தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் மேலும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும், ஜனநாயகத்தின் உரிமை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- ஹியூமன் ரைட்ஸ் டுடே செய்தியாளர் இ.சிவகாமிநாதன், முருகன், பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தது  சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.