பிரதமர் நரேந்திர மோடியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, டில்லியில் சந்தித்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசினார்.
|
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து எனது தொகுதியான தூத்துக்குடி உள்ள பிரச்னைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் ஏற்றுமதி போக்குவரத்து முனையம் பிரச்சினைகள் குறித்தும் விவரித்தேன்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய விமான முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றியும் தெரிவித்தேன் என்று கனிமொழி கருணாநிதி எம்பி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதியில், தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள குலசேகர பட்டிணம் ராக்கெட் ஏவுதளம், மற்றும் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா மற்றும் தூத்துக்குடிக்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் வரவுள்ள நிலையில் கனிமொழி எம்பி, பிரதமர் மோடி சந்திப்பு தென்மாவட்ட தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

