December 1, 2025
#தூத்துக்குடி

ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு, துணை முதல்வர் உதயநிதி தங்க மோதிரம் வழங்கினார்

தூத்துக்குடி,சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார்.

இந்தோனேசியா தலைநகரான ஜகர்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் பந்தயத்தில் 6 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக.

ஹோலி கிராஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி மாணவி “அன்விதா சிவக்குமார்” 5 வயது ஐ.பி.என் அகடமி சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று முதல் இடத்தை வென்று சாதனை படைத்திருந்தார்.

மேலும் 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும்பெற்று மூன்றாம் இடத்தை பெற்று, விளையாட்டுத் துறைக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும். பெருமை சேர்த்திருந்தார். தமிழக அரசு விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளும் ஊக்கமும் ஆக்கமுமே 5 வயது சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மன தைரியத்துடன் கலந்து கொண்டு சாதனை படைக்க முடிந்துள்ளது. அந்த சாதனையை பெற்ற மாணவியை சென்னைக்கு வரவழைத்து பசுமை வழி சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் மாநில தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவி தனது திறமையின் மூலமாக சாதனைகள் பல பெற வேண்டும். வெற்றிகள் குவிய வேண்டும் என்றும் மாணவியிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் போது மாநில தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் உடனிருந்தார்.