தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேல ஆத்தூர் ஊராட்சியில் 08.06.2025 அன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2025-26-ம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் இன்றைய தினம் மேல ஆத்தூர் ஊராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இன்று முதல் 26.03.26 வரை 12 ஊராட்சி ஒன்றியங்களில் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுபோன்று. தமிழ்நாடு முழுவதும் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சையும் அது சம்பந்தமாக ஏற்படக்கூடிய நோய்களையும் எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை கால்நடை வளர்ப்பு இடத்தில் விவசாயிகளுக்கு ஏற்படுத்துவதற்காக இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புதிதாக நோய்களும் உருவாக்கி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் பாரம்பரியமாக கால்நடை வளர்த்து வருகிறார்கள். கால்நடை வளர்ப்பது மூலமாக இயற்கையான உரம் மற்றும் பால் போன்றவையும் கிடைக்கிறது.
குறிப்பாக, கால்நடைகளுக்குத் உடல்நலம் சரி இல்லாமல் இருந்தால் மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்படும். எனவே தேவையான மருத்துவ சேவைகள் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும். குக்கிராமங்களுக்கும் சென்று சேரும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு கிராம ஊராட்சிகளில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு, கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற முகாம்கள் ன்னு கால்நடை மருந்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் கட்டுதரையையும் சுத்தமாக இருந்தால் தான் நோய்கள் தாக்காமல் இருக்கும். குறிப்பாக, மழை காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கால்நடைகளை பாதுகாத்து உழவுத்தொழிலையும், கால்நடை வளர்ப்பு மூலமாக பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டும்மல்லாமல், இந்த சிறப்பு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம். செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சில அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள். கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதிலளிப்பார்கள்.
எனவே, கால்நடை வளர்ப்போர்கள் ஆரோக்கியமான கால்நடைகளை வளர்த்து, தங்களது பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், நமது மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நமது கலெக்டர் துறை ரீதியாக ஆய்வு செய்து, முன்மாதிரியான ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக, பெண்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தினை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேம்படுத்துவது தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய எண்ணமாகும். எனவே, முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக எங்களுடைய கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு, நோயில்லாத ஆரோக்கியமான கால்நடைகளை வளர்த்து தங்களுடைய குடும்பத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் மரு.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் மரு. ஆண்டனி இக்னேஷியஸ், சுரேஷ், திமுக மாநில வர்த்தகரணி துணை செயலாளர் உமரி சங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், கோட்டாளம், உதவி இயக்குநர்கள். கால்நடை மருத்தவர்கள், அரசு அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர்கள். பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

