December 1, 2025
#கோவில்பட்டி

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகத்திற்கு கு.அழகிரிசாமி பெயர் வைக்க கோரிக்கை.

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை மனுவினை கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரிடம் கொடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் சாகித்ய பால புரஸ்கர் விருத்தாளர் எழுத்தாளர் கா.உதயசங்கர்,நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு , எழுத்தாளர் சாரதி, துணைத்தலைவர் திடவை பொன்னுச்சாமி, இணைச் செயலாளர் முத்துராஜ் , செயற்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பிரான்சிஸ், ஹரி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்