தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் சர்வே எண் 230/1C8 நிலத்தினை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசு அலுவலர்களை ஏமாற்றி போலியாக பத்திர பதிவு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திர பதிவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி சார்பதிவாளர் அவர்களிடம் புரட்சி பரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. 
இதில் கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொறியாளர் துறை மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பாப்பண்டு, மாரிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

