பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (மே 07)ல் இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம் என்று இந்தியா அறிவித்துள்ளது.
அனைத்து எதிக்கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இந்த பதிலடிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
யார் இந்த ‘லெப்டினன்ட் கர்னல்’ சோஃபியா குரேஷி மேலும் ‘விங் கமாண்டர்’ வ்யோமிகா சிங்?
|
கர்னல் சோபியா குரேஷி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்த 2 பெண்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி. 44 வயதாகும் இவர், குஜராத்தை சேர்ந்தவர். இந்திய ராணுத்தில் சோஃபியா 1999-ல் பணியில் சேர்ந்தார். சோஃபியாவை திருமணம் செய்துகொண்டவரும் ஒரு ராணுவ வீரர். ராணுவக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரின் தாத்தா, அப்பா, கணவர் என அனைவருமே ராணுவத்தில் இருந்தவர்கள், இருப்பவர்கள். சோஃபியா, ஐநாவின் அமைதி குழுவில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்த 2006-ல் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட குழுவில் இடம்பிடித்தார். 2016ஆம் ஆண்டு 18 நாடுகள் பங்கேற்ற Exercise Force 18 அணிவகுப்பு ஒத்திகையில் இந்திய ராணுவத்தை வழிநடத்தியவர். அந்த ஒத்திகையில் இந்திய அணியை வழி நடத்திய ஒரே மற்றும் முதல் பெண் அதிகாரி சோஃபியாதான். லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி, ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவிற்கு தலைமை தாங்கிய முதல் முஸ்லிம் பெண் அதிகாரி ஆவார். கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் பிரிவில் சோஃபியா தற்போது அதிகாரியாக இருக்கிறார் |
|
வியோமிகா சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகத்தினருக்கு விளக்கம் அளித்த மற்றொருவர் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங். 6-ஆம் வகுப்பில் இருந்தே பறக்க விரும்பியவர். பொறியியல் படித்துவிட்டு இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக 2019ல் பணியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் விளக்கங்கள் சொன்ன வியோமிகா சிங், இஞ்சினியரிங் பட்டதாரியான இவர், திறமையான ஹெலிகாப்டர் பைலட். இந்திய எல்லையின் மலை முகடுகளுக்கு மேலே 2,500 மணிநேரம் பறந்த அனுபவம் மிக்கவர். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் 2,500 மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். விமானப்படையில் உள்ள செட்டக், சீட்டா ஹெலிகாப்டர்களை இயக்கும் திறமை பெற்றவர். 2020 நவம்பரில் அருணாச்சல பிரதேசத்தில் பனியில் சிக்கியவர்களை மீட்க உதவியவர். கடல் மட்டத்தில் இருந்து 21,650 அடி உயரத்தில் உள்ள மணிரங் மலையேறிவர். வீர உரையாற்றிய மங்கைகள். |
பஹல்காமில் தீவிரவாதிகள் ஆண்களை குறி வைத்து கொலை செய்தனர், நெற்றி பொட்டுக்கு அருகே துப்பாக்கியை வைத்து சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், பாகிஸ்தானை பந்தாட ‘எங்கள் ஊர் பெண்களே போதும்’ என்ற செய்தியை நேரடியாக சொல்வது போல் உள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரின் மூலம் பெண்களின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளை பந்தாடி, தாக்குதல் குறித்த விபரங்களை பெண் அதிகாரிகள் மூலமே தெரிவித்துள்ளது. முதன் முறையாக பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா என்பது கவனிக்கத்தக்கது
.



