December 1, 2025
#செய்தி

200 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கா? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு

சமீபத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளின் போலி நோட்டுகள் சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு 200 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யுமா?என் குழப்பம் நிறைந்த கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரூபாய் 200நோட்டுகள் ரத்து;

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி இது வதந்தி என்று தெளிவுபடுத்தியுள்ளது. ரூபாய் 200 நோட்டுகளை ரத்து செய்ய தற்போது எந்த திட்டமும் இல்லை.

ஆனால், இந்த நோட்டுகளின் போலி நோட்டுகள் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உங்களிடம் உள்ள ரூ.200 நோட்டு போலியானதா என்பதை அறிய, பின்வரும் அம்சங்களைச் சரிபார்க்கவும். நோட்டின் இடதுபுறத்தில் தேவநாகரி எழுத்தில் 200 எழுதப்பட்டிருக்கும். மகாத்மா காந்தியின் தெளிவான படம் நடுவில் இருக்கும். நுண் எழுத்துக்களில் ‘RBI’, ‘Bharat’, ‘India’ மற்றும் ‘200’ என்று எழுதப்பட்டிருக்கும். வலதுபுறத்தில் அசோகா தூணின் சின்னம் இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் அறிவுரைகள்:

போலி நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூபாய்.200 நோட்டுகளை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.