CN.அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.
மக்கள் குறைதீர்க்கும் முகாமை துவக்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சியில் ஓவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. அதன்படி 06.11.24 வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 45 மனுக்கள் பெறப்பட்டதில் 37 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் துறை ரீதியான விசாரணையில் உள்ளது விரைவில் இம்மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கிள் ஓடையில் அமலை செடிகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அகற்றி முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் உப்பாறு ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளன இதனால் தடை இல்லாமல் மழை நீர் கடலுக்குள் சென்று விடும்.
மேலும், தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளிலும் சாலை மற்றும் வடிகால் வசதிகள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் சாலை வசதிகள் கேட்டு மக்கள் மனுக்களை அளித்து வருகிறார்கள். விரைவில் இப் பகுதிகளில் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
பொது மக்களின் வசதிக்காக தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், முனிர் அகமது, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி, காந்திமணி, கற்பககனி, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

