December 1, 2025
#ஒட்டப்பிடாரம்

மணியாச்சியில் பேருந்து நிறுத்த கட்டிடத்தைஎம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, திறந்து வைத்தார்

தூத்துக்குடி; ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சியில் பயணிகள் வசதிக்காக ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த கட்டிடத்தை, ஒட்டபிடாரம் சட்டமன்றஉறுப்பினர்எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.

மணியாச்சியில் பயணிகள் வசதிக்காக ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் மணியாச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் பயணிகள் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ.,

ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் எல்.ரமேஷ் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர்பிரேமாகொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர்அருண்குமார், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்அய்யாத்துரை,பணி மேற்பார்வையாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் ராஜன், ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன்,ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர்கள் முத்துப்பாண்டி, ரத்தினவேல்,ஆறுமுகராஜா,ளமுருகன் மற்றும் கப்பி குளம் பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

.