by,CN. அண்ணாதுரை
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கே.கைலாசபுரம், என்.புதூர் மற்றும் நாரைக்கிணறு பகுதிகளில் சாலை மற்றும் பயணிகள் நிழற்குடை மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி கே.கைலாசபுரம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
முன்னதாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு ஊராட்சிஎன். புதூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் மற்றும் காலனி தெருவில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
தொடர்ந்து மருதன்வாழ்வு ஊராட்சி நாரைக்கிணறு கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளையும்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார்,
சதிஷ்குமார், ஊராட்சி செயலர் ராஜன், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பார்வதி, மகளிரணி ஆவுடைத்தாய்,ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல், கிளை செயலாளர்கள் கொடியின் குளம் ராஜ், என்.புதூர் பாலவிநாயகம், நாரைக்கிணறு மனோகரன், சதீஷ், வினோத், கே.கைலாசபுரம் முருகன், பழனி, கீழக்கோட்டை கோமதி, கிளை பிரதிநிதி ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

