பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி :
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை
நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், நிர்வாக குழுவைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக குறிஞ்சி நகர் முகாம் அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி.யை மாியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட செயலாளர் மோகன்ராஜ் கோாிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து கிடைக்க ஆவணம் செய்வேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, பிரஸ்கிளப் பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஷ்குமாா், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் குமார், செந்தில்முருகன், கண்ணன், டேவிட்ராஜா, முத்துராமன், ராஜன், ஆகியோர் உடனிருந்தனர்.

