தூத்துக்குடி, செப்.7:
தூத்துக்குடி போல்பேட்டையில் புதிதாகஅமைக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனையை அமைச்சா் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
இம்மருத்துவமனை 24 மணி நேர சிகிச்சை வசதியும் சிறப்பு மருத்துவா்கள் மூலம் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்க படும். மேலும் இங்கே மருந்தகம், பிசியோதரபி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிதாக அமையப்பெற்றுள்ளது. இம்மருத்துவமனை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்தாா். சேலம் கிருபா மருத்துவமனை மருத்துவா் பிராங்கிளின் கிருபா முன்னிலை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன், குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தாா்.
திறப்புவிழாவை முன்னிட்டு நீரிழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது.
விழாவில் அமைச்சரின் தாயார் எபனேசர் பெரியசாமி,டாக்டர்கள் மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா மகிழ், என்.பி.அசோக், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அருணாதேவி, நாகராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், ராஜ்குமார். மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ஐ.ரவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன். ஜாக்குலின் ஜெயா. கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அ.முத்துச்செல்வம், ராஜாமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார். தொழிலதிபர் சுதன் கீலர் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், மருத்துவமனை ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

