December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர்

    “மைக் கிடைத்தால் போதும்”

அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூற, நீங்கள் எப்படி பதவிக்கு வந்தீர்கள் என்று தெரியும் என அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க அதிமுக – பாஜக இடையே வார்த்தை யுத்தம்  வெடித்து அணல் பறக்கிறது

இரு கட்சி தலைவர்கள் இடையேயான வார்த்தை போர் மிக பெரிய அளவில் வெடித்து அணல் பறக்கிறது.அதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ,அவதூறாக பேசியதாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் கண்டன கோஷத்தை எழுப்பினார்கள்.அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ வழிகாட்டுதலின் பேரில், முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில்,மாவட்ட அவைத்தலைவர் என்கே பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு மகேஷ் கிழக்கு பால்ராஜ் நகரச் செயலாளர்கள் விளாத்திகுளம் மாரிமுத்து,எட்டயபுரம் ராஜகுமார், ஆகியோர் முன்னிலையில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கோஷம் எழுப்பி அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார்,ஒன்றிய மாணவரணி செயலாளர் கண்ணன்,வார்டு செயலாளர்கள் கருப்பசாமி,முனியசாமி,கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, பாண்டியராஜன்,சண்முகச்சாமி,
ஆனந்த்,கணேசன்,வார்டு கவுன்சிலர் பிரியா,மகளிரணி சாந்தி,ஆறுமுகத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.