தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்ேவறு பகுதியில் மழைக்காலங்களில் தேங்குகின்ற மழை நீரை வெளியேற்றும் வகையில் வடிகால்களை தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்ெகாண்டும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 34வது வார்டுக்குட்பட்ட அசோக்நகர் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 12 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டு வரும் புதிய கால்வாய் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்ட போது புதிய கால்வாய் வசதி, அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ஓவ்வொரு பகுதிக்கும் தேவையான சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் சீரான குடிநீா் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட சில பணிகளையும் அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொிவித்தார்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சந்திரபோஸ், மாநகராட்சி உதவி பொறியாளர் சேகா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, அல்பட், உள்பட முன்னாள் அரசு ஊழியா்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

