December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்

சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, எஸ்பிஜி ேகாவில் சந்து உள்ளிட்ட தெருக்களில் குடியிருக்கும் பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக குடிநீாில் கழிவு நீர் கலந்து வருவதாக மேயர் ஜெகன் பொியசாமியிடம் நேரடியாக தகவல் தொிவித்திருந்தனர். இந்நிலையில் நேரடியாக அப்பகுதியை பார்வையிட்டு அதிகாாிகளிடம் வரைபடத்தை பார்த்து அந்த குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று குடிநீர் ஆய்வாளாிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அப்பகுதி மக்கள் சில சந்து பகுதிகளில் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சாி செய்து தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தனர். அதனையடுத்து அப்பகுதியில் உள்ள குறுகலான சந்து பகுதியில் கழிவுநீர் ஓடாமல் தேங்கியிருந்ததையும் பார்வையிட்டு அதை முறைப்படுத்த வேண்டும் என்று சுகாதார ஆய்வாளாிடம் கேட்டுக்கொண்டார்.

மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், இந்த பகுதிக்கு பேவர்பிளாக் சாலை அமைத்து தருவேன் என்று உறுதியளித்தார்.

ஆய்வின் போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் பொன்ராஜ், மாநகராட்சி குடிநீர் ஆய்வாளர் மாாியப்பன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், வட்டப்பிரதிநிதி ஜெபக்குமார் ரவி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், உள்பட பலர் உடனிருந்தனர்.