December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி நினைவுநாள், அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


 தூத்துக்குடி,திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க 

வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில், அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நான்காம் கேட் குறிஞ்சிநகர் வழியாக எட்டையாபுரம் சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கம் சென்றடைந்தது. அங்குள்ள கலைஞர் முழுவுருவச் சிலைக்கு அலங்காிக்கப்பட்ட படத்திற்கும் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபேர்இளம்பாிதி, சீனிவாசன், அபிராமிநாதன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், இம்மானுவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், கோட்டுராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, ராமர், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், சுரேஷ், ராஜ்குமாா், மீனாட்சி சுந்தரம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, முருக இசக்கி, சாரதி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அணி துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தொமுச நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகள், பகுதி அணி அமைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் அலங்காிக்கபட்ட கலைஞர் கருணாநிதி படம் வைக்கப்பட்டு திமுகவினா் மலா் தூவி மாியாதை செய்தனா்.