December 1, 2025
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

கனமழையால் உடைப்பு ஏற்பட்ட பச்சையாபுரம் ஊரணி வாய்க்கால் கரை உடனே சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சையாபுரம் நீர் வரத்து கால்வாய் கரை கடந்த டிசம்பர் மாத கடும் மழையால் சேதமடைந்தது .

கடும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மராமத்து பணிகள் செய்யபட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த பணியும் வரும் மழைக்காலம் துவங்கும் முன் உடனடியாக சீர்செய்ய வேண்டும்
என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.